சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய வீரர்கள்

x

சிவகங்கை மாவட்டம் கௌரிப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 மாடுகளும், 162 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 10 காளைகள், மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டு பிடி மாடுகளாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்