கர்நாடகாவில் தமிழக வியாபாரி கடத்தல்... தப்பிய மகன் - கொள்ளையர்கள் செய்த அதிர்ச்சி செயல்

x

கர்நாடகாவில் தமிழகத்தை சேர்ந்த தங்க வியாபாரியை காரில் கடத்தி சுமார் 350கிலோ வெள்ளி மற்றும் ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

சேலத்தை சேர்ந்தவர் அணில் மகாதேவ். நகை வியாபாரியான இவர், தனது மகன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, சுமார் 350 கிலோ வெள்ளி நகைகளுடன் மகாராஷ்டிராவில் இருந்து சேலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் காரை வழிமறித்த கொள்ளையர்கள், காருக்குள் இருந்த அனைவரையும் தாக்கியுள்ளனர். இதில், அனிலின் மகன் மற்றும் நண்பர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அனிலை மட்டும் கொள்ளையர்கள் காருடன் கடத்திச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. செல்லும் வழியில் அணிலை மட்டும் காரில் இருந்து கீழே இறக்கி விட்ட கும்பல், 350கிலோ வெள்ளி மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்க பணத்துடன் தப்பியோடியதாக புகாரளிக்கப்பட்டிருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்