"முக்கிய துறைகளில் இந்திய அளவில் தமிழ்நாடு டாப் 3 இடங்களில் உள்ளது".. அமைச்சர் எ.வ.வேலு சொன்ன தகவல்

x

இந்திய மாநிலங்களில் 'தமிழ்நாடு' தலைமை பண்புகளோடு இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம் தெரிவித்துள்ளார்...

தொழில் வளர்ச்சிக்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, ஜனவரி 7ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், எம்.பி அண்ணாதுரை, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு 23 ஆயிரத்து 628 கோடி ஜிஎஸ்டி செலுத்துவதாகவும், ஆனால் சொற்பமாக 2 ஆயிரத்து 926 கோடி ரூபாயே திரும்ப கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்