பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை..இளைஞர்களுக்கு போதை ஊசி - தாம்பரத்தில் பகீர்

x

தாம்பரத்தில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில், தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கஸ்தூரிபாய் நகரில் தினேஷ்குமார், திவாகர், மணியரசன் ஆகியோர் போலீசிடம் சிக்கினர். இவர்களிடம் 300க்கும் மேற்பட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர். விசாரணையில் வலி நிவாரணி மாத்திரை மூலம் போதை ஊசி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், மாத்திரைகளை மொத்தமாக வாங்கி பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 3 பேருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? மருந்துக் கடையில் மொத்தமாக மாத்திரை விற்கப்படுகிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்