ஷம்பு எல்லையில் உடனே அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

x

ஷம்பு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்களை அப்புறப்படுத்த விவசாயிகளை அறிவுறுத்துமாறு பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தால் மூடிய ஷம்பு எல்லையை திறக்க பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அரியானா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது, போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சாராத நபர்களைக் கொண்ட குழுவுக்கான பெயர்களை அளித்த பஞ்சாப், அரியானா மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், ஷம்பு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்களை அப்புறப்படுத்த விவசாயிகளை அறிவுறுத்துமாறு பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் வாகன நிறுத்துமிடங்கள் இல்லை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் சென்று வர சிறிதளவேனும் சாலையை திறப்பது அவசியம் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்