உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு.. ஜூன் 3ல் விசாரணை

x

டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், யமுனை ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தியும், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் நிலையில், ஹரியானா, உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஒரு மாதத்துக்கு கூடுதல் நீரை திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூன் 3-ஆம் தேதி விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்