ஹேமந்த் சோரன் விவகாரம் - EDக்கு இடியை இறக்கிய உச்சநீதிமன்றம்

x

ஹேமந்த் சோரன் விவகாரம் - EDக்கு இடியை இறக்கிய உச்சநீதிமன்றம்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் அளித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமலாக்க துறையின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் அளித்த ஜார்க்கண்ட்

உயர்நீதிமன்றம் உரிய விளக்கங்களுடன் தீர்ப்பு கூறியுள்ளது

என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை

சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, சாட்சிகளின் வாக்குமூலத்தை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நம்பவில்லை என்றும், வழக்கிற்கு உறுதியான ஆவணங்கள் உள்ளன என வாதிட்டார். இந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்