ஒரே நேரத்தில் சாம்சங் ஊழியர்கள்118 பேர் மீது வழக்கு... பரபரப்பில் காஞ்சி

x

காஞ்சியில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 9வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைபயணமாக வந்து ஆட்சியரை சந்தித்து மனுவினை அளிக்கவிருந்தனர். ஆனால், அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை விடுதலை செய்யப்பட்ட 118 ஊழியர்கள் வீடு திரும்பினர். தொழிற்சங்க நிர்வாகிகள் மூவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் 118 பேர் மீது தற்போது 2 பிரிவுகளின் கீழ் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்