கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்ட நபர்.. மகனுடன் எடுத்த விபரீத முடிவு - ராம்நாட்டில் பரபரப்பு சம்பவம்

x

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர். புது வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்ற இவர், பணத்தை நபர் ஒருவரிடம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் அப்துல் காதர் சிரமப்பட்ட நிலையில், வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லையென குற்றம்சுமத்திய அப்துல் காதர், தன் மகனுடன் சேர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்