கழுத்தறுத்து தற்கொலை முயற்சி - கணவர் உயிரிழப்பு

x

திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் - சங்கீதா தம்பதி வீட்டிலேயே திண்பண்டங்களை தயார் செய்து விற்பனை செய்து வந்தனர். சொந்த வீடு கட்டுவதற்காக தனியார் நிதி நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு, மற்றும் தனி நபர்களிடம் சுரேஷ் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி கேட்டு ஏராளமானோர் தொந்தரவு செய்ததால், விரக்தியில் இருவரும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி சங்கீதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்