பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை வீட்டில் சடலமாக கிடந்த தந்தை, தாய் மற்றும் மகள்...

x

தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

பழனி முல்லை நகரில் வகள்சித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . இந்தநிலையில் வீட்டிலிருந்த இளமாறன் மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்து வீட்டில் இருந்தவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர். தொலைபேசியை யாரும் எடுத்து பதில் கூறாததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் இறந்த நிலையில் கடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாய் ரேணுகாதேவி மகள் தேன் மலர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் தந்தை இளங்குமரன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இளங்குமரன் மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்