சென்னையில் காலேஜில் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி கொண்ட மாணவர்கள்

x

சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கு இடையேயான மோதலில், மாணவர் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ஆத்திரமடைந்த மாணவர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை வைத்து மற்றொரு மாணவரின் முன்பக்க தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்