இலங்கையிடம் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த மைனர் சிறுவனுக்கு நேர்ந்த சோதனை

x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களையும் 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றது. பின்னர், அவர்களை ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 24 பேரை 15ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, 18 வயது நிரம்பாத ஒரு மீனவரை, சிறுவர் காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்