முன்கூட்டியே தொடங்கும் மழை ஆட்டம்.. அறிவித்தது இந்திய வானிலை மையம்

x

தமிழ்நாட்டில் ஒருபக்கம் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கோடை மழையும் கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை வரும் மே 31ம் தேதி கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. எனினும் வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதிதான் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்பதையும் வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்