"தமிழகத்தில் ஒரு நாளுக்கு இவ்வளவு தற்கொலைகளா.." - ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்

x

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தானை நடிகர் சித்தார்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தன்னார்வ தற்கொலை தடுப்பு மையம் சார்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தானில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கெடுத்தனர். இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷணன், இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 50 பேரும் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்