"வணக்கம் டா மாப்ள.. வழிய விடு.." குட்டி தூக்கத்திற்கு நடுவே வந்த பெரிய பாம்பு | Snake | Viral Video

x

கேரளா மாநிலம், திருச்சூரில் ஒருவர் கோவில் முன்பு மரத்தடியில் உறங்கிய முதியவரை பாம்பு உரசிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சூரை அடுத்த கொடுங்கலூரில், கோவில் அருகில் உள்ள மரத்தடியில் சிலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த இடத்திற்கு வந்த பெரிய மஞ்சள் சாரை பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முதியவரை உரசிச் சென்றது. அருகில் இருந்தவர்கள் அலறியபோது, அவர் மெதுவாக எழுந்து அமர்ந்து, பாம்பை பார்த்து பயப்படாமல் அமைதியாக அங்கேயே உட்கார்ந்திருந்தார். மற்றவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்