அதி நவீன இரட்டை சுத்திகரிப்பு இயந்திரத்தை துவக்கிய SKM பூர்ணா

x

18 ஆண்டுகளுக்கும் மேலாக பல வகையான சமையல் எண்ணெய்களை தயாரித்து வரும் SKM பூர்ணா நிறுவனத்தில், புதிய அதி நவீன இரட்டை சுத்திகரிப்பு இயந்திரம் அறிமுகமாகி உள்ளது. SKM பூர்ணா நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.சந்திரசேகர் இயந்திரத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம், ரைஸ் பிரான் ஆயிலின் நிறம் மேம்படுவதுடன், அதில் உள்ள நுண் ஊட்டச் சத்துக்கள் பாதுகாக்கப்படுவதாகவும், மருத்துவர்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரைஸ் பிரான் ஆயில் பரிந்துரைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயந்திர துவக்க நிகழ்ச்சியில், SKM பூர்ணா நிறுவன இயக்குநர் சியாமளா ஷர்மிலி, செயல் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணா மற்றும் பொது மேலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்