சிவகாசியை குலை நடுங்கவிட்ட ஆணவக்கொலையில் திடீர் திருப்பம்.. SP அறிக்கையில் சொன்ன மிக முக்கிய தகவல்

x

சிவகாசியில்... காதல் திருமணம் செய்த இளைஞரை, பெண்ணின் சகோதரர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் ஆணவக் கொலை அல்ல என விருதுநகர் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, கார்த்திக் பாண்டியன் என்பவரை அவரது மனைவியான நந்தினியின் சகோதரர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கார்த்திக் - நந்தினி இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்திற்கு நந்தினியின் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. நந்தினியின் சகோதரர்கள் தனபால், பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா என கொலையாளிகள் மூவரும் போலீசில் சரணும் அடைந்திருந்தனர். இதனிடையே, இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக கூறி இணையத்தில் பரவிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இந்த கொலை சம்பவம் ஆணவக் கொலை அல்ல எனவும், இரு தரப்பும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் எனவும் கூறி அறிக்கை வெளியிட்டிருக்கும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான், அண்மையில் மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த சகோதரர்கள் கொலையை அரங்கேற்றி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்