மனைவிக்காக காத்திருந்த கணவனை வெட்டிக் கூறு போட்ட மச்சான்கள்...விதவையாக்கி அழகு பார்த்த கொடூரம்

x

மனைவிக்காக காத்திருந்த கணவனை

வெட்டிக் கூறு போட்ட மச்சான்கள்

விதவையாக்கி அழகு பார்த்த கொடூரம்

ஊரே பார்க்க ரத்த வெள்ளத்தில்

துடித்து மடிந்த காதல் கணவன்

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞரை, மனைவியின் சகோதரர்களே வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலை குறித்து விரிவாக பார்க்கலாம்....

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் நந்தினி. 23 வயதான இவருக்கும், திருவில்லிபுத்தூர் இந்திராநகரை சேர்ந்த பைக் மெக்கானிக் கார்த்திக்பாண்டி என்பவரும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலந்துள்ளது.

கார்த்திக் பாண்டியின் தாய்- தந்தை வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்த கையோடு அந்த பகுதியில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி, சிவகாசி மேற்குபகுதி அய்யம்பட்டி கிராமத்தில் வாடகை வீடெடுத்து வசித்து வந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தேவர்குளத்தில் கார்த்திக் பாண்டி பைக் மெக்கானிக் கடை நடத்தி வந்தநிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நந்தினியும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வரும் காதல் மனைவியை அழைத்து செல்வதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே ஆசையோடு காத்திருந்துள்ளார் கார்த்திக் பாண்டி.... அப்போது, திடீரென நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் உள்பட 3 பேர் கொண்ட ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்து இறங்கி உள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக் பாண்டி, உயிர் பயத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓட முயன்றுள்ளார். அதற்குள் விரட்டி சென்று மறித்த அந்த கும்பல் கார்த்திக் பாண்டியை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து பலியானநிலையில், அங்கு வந்த போலீசார் தடயங்களை சேகரிக்க தொடங்கினர்.

கொலை செய்த கையோடு பாலமுருகன் உள்பட மூன்று பேரும் திருத்தங்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காதல் திருமணம் செய்த இளைஞர் 8 மாதங்களில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது ஆணவ கொலையா? அல்லது கொலைக்கான காரணம் வேறு ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்