குடிக்கும்போதே நிறுத்தப்பட்ட உயிர்... ஈரக்குலையை நடுங்க வைக்கும் சம்பவம்

x

சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளநிலையில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், தனியாக வசித்து வந்த முத்துப்பாண்டி அதே பகுதியை சேர்ந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் மணிகண்டன் என்பவருடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது முத்துப்பாண்டி மனைவியை பற்றி மணிகண்டன் தவறாக பேசியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், வாங்கிய பணத்தை தராமால் முத்துப்பாண்டி மிரட்டியதால் அவரை கொலை செய்ய மணிகண்டன் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து தனது நண்பர் தனபாலு மூலம் முத்துப்பாண்டியை மது அருந்த அழைத்த மணிகண்டன் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி உள்ளனர். தகவறிந்த போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் மனைவியை தவறாக பேசியதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்