`பயிரை மேய்ந்த வேலி'... அதிர்ந்த வாடிக்கையாளர்கள்... வங்கியில் அரங்கேறிய மெகா `ஸ்கேம்'...

x

சிவகாசியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஒன்றில், போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 50க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்களின் பெயர்களில் இந்த மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், வங்கியின் நகை மதிப்பீட்டாளர் முத்துமணி உட்பட இருவரை கைது செய்தனர். இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அதே வங்கியின் மேலாளர் அமித்குமார், திருநெல்வேலி கிளையில் பணிபுரியும் உதவி மேலாளர் அரவிந்த் மற்றும் செங்கோட்டை கிளையில் பணிபுரியும் முகேஷ்குமார் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்