விபத்தில் சிக்கிய நபருக்கு... சட்டென முதலுதவி அளித்த முன்னாள் அமைச்சர்

x

விபத்தில் சிக்கிய நபருக்கு... சட்டென முதலுதவி அளித்த முன்னாள் அமைச்சர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி விஜயபாஸ்கர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, காட்டாம்பூர் என்ற இடத்தில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய இரு இளைஞர்களை, பார்த்த அவர் உடனடியாக காரில் இருந்து இறங்கி, முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். தொடர்ந்து, இளைஞர்கள் இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்