கதறிய சிறுமி... கொடூரனுக்கு மரணத்திற்கு நிகரான தண்டனை... | TN Police

x

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்துள்ள கல்லங்குடி புதூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாண்டியராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பாண்டியராஜனுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்