ஆளே இல்லாமல் இருக்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை - சிவகங்கையில் அவலம்

x
  • சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பேரிடர் மேலான்மை கட்டுப்பாட்டு அறை ஆட்களே இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்புகள், வெள்ள சேத‌த்தில் சிக்குவோர் உதவி கோர, 1077 என்ற இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வீடுகள் இடிந்து சேதமுற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், பொதுமக்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அளவுக்கு கட்டுப்பாட்டு அறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்