உயிரை கையில் பிடித்துக்கொண்டு கிளாசுக்குள் இருக்கும் மாணவர்கள் - அச்சத்தில் பெற்றோர்

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா வேலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்க பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. பள்ளியின் மேற்கூரை ஓடு உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், கழிப்பறை மிக மோசமான நிலையிலும் காட்சியளிக்கின்றன. மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விஷ ஜந்துக்கள் வகுப்பறைக்குள் நுழைய வாய்ப்புள்ள நிலையில் குழந்தைகள் அச்சத்துடன் படித்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக தொடர் கனமழை இப்பகுதியில் பெய்து வரும் நிலையில் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நிகழ்வதற்குள் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்