கோயில் பீடம் ஆக்கிரமிப்பு - ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உச்சிமாகாளி அம்மன் கோயில் பீடத்தை சுற்றிலும் தனியார் பேக்கரி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் 2 நாட்களில் முளைப்பாரி திருவிழா நடக்க இருக்கும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், அக்கிரமிப்பை அகற்றக் கோரி, பேக்கரி உரிமையாளரிடம் கூறினர். அவர் சம்மதிக்காததால் அவருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள், பின்னர் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, செயல் அலுவலர் சங்கர் கணேஷிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்து விட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்