வேலை முடிந்து ஆசையாய் வீடு திரும்பிய பெண்கள்.. எமனாக உயிரை பறித்த இடி

வேலை முடிந்து ஆசையாய் வீடு திரும்பிய பெண்கள்.. எமனாக உயிரை பறித்த இடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கல்லல் பகுதியில் இடி தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களான, கவிதா மற்றும் வசந்தி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்த நிலையில், இருவரும் இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர், தகவல் அறிந்த வந்த கல்லல் காவல் துறையினர் உடல்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்