சிவகங்கையை உலுக்கிய கொடூர கொலை... கொலையாளிகளை கதறவிட்ட கர்மா

x

சிவகங்கையில் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோட முயன்ற 3 பேர் கீழே விழுந்த‌தில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. கீழப்பசலையைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கடந்த 1ஆம் தேதி மானாமதுரையில் இருந்து கடத்திச் சென்று, மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு கண்மாயில் உடல் மீட்கப்பட்ட நிலையில், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, 5 பேரை கைது செய்தனர். அவர்களை பிடிக்க சென்ற போது தப்பியோட முயன்றதாகவும், அப்போது தவறி விழுந்து 3 பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்