அச்சத்தில் பயணிக்கும் மக்கள்.. ஆங்காங்கே சிதறி கிடக்கும் ஆணி.. முகம் சுளிக்க செய்த பேருந்து

x

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து, சிவகங்கை சென்று கொ ண்டிருந்த அரசு பேருந்து, அண்மையில் எஃப். சி. செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. சுத்தம் செய்யப்படாமல் வந்த அந்த பேருந்தில், ஆங்காங்கே ஆணிகளும், நட்டு போல்டுகளும் சிதறிக்கிடந்தன. இதனால், ஆணிகள் கால்களை பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்துடன் இந்தனர்.புதிதாக அடிக்கப்பட்ட பெயிண்ட் வீச்சமும் பயணிகளை முகம் சுளிக்கத் செய்தது. மேலும், பேருந்தில் ஆங்காங்கே சரியாக பொருத்தப்படாத தகரங்களின் அதிர்வுகளும் பயணிகளை ஒருவித அச்சத்திலேயே வைத்திருந்தன. எஃப்.சி. செய்து பின்னரே இப்படி இருக்கும் இந்த பேருந்து, அதற்கு முன் என்படி இருந்திருக்கும் என பயணிகள் கேள்வி எழுப்பினர். இத்தகைய அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருப்பதாக கூறிய அவர்கள், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்