சிவகங்கை கத்திக்குத்து.. கைதானவருக்கு நேர்ந்த கதியால் பரபரப்பு

x

இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன், மனோபாலன் மற்றும் நண்பர்களுடன், பெரும்பச்சேரியில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றுள்ளனர். அங்கு நாகநாதபுரத்தைச் சேர்ந்த சண்முகபாண்டியனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனோபாலனை சண்முக பாண்டியன் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த மனோபாலன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சண்முக பாண்டியனை கைது செய்தனர். அப்போது, தப்பியோட முயன்ற சண்முக பாண்டியனின் கால் முறிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், போலீசார் திட்டமிட்டே காலை உடைத்ததாக கூறி, கிராம மக்களும் உறவினர்களும் மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்