"ஜாடை என் மாதிரி இல்லையே.. யாருக்கு பிறந்தது.." குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கொடூரம்

x

சிவகங்கை மாவட்டம் நாட்டார்குடியை சேர்ந்தவர் சந்திரசேகர். மனைவியை பிரிந்த இவரும், கணவரை பிரிந்த மஞ்சு என்ற பெண்ணும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 4 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், நாட்டார் குடி அருகிலுள்ள கோயிலில் தம்பதியின் 4 மாத குழந்தை காயத்துடன் சடலமாக கிடந்ததும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையை சந்திரசேகர் அடக்கம் செய்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த போலீசார் வருவாய்துறை முன்னிலையில் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிவில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், தனக்கு பிறந்த குழந்தை இருவரது ஜாடையும் இல்லாமல்... சிகப்பாய் இருந்ததால்... சந்தேகம் கொண்ட சந்திரசேகர், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். இதில் ஏற்பட்ட மோதலில், 4 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை இருவரும் மாறிமாறி தரையில் போட்டு அடித்து கொன்றது தெரியவந்தது. சந்திரசேகர் மற்றும் அவரின் தாயை கைது செய்த போலீசார், தென்காசியில் தலைமறைவாக இருந்த சந்திரசேகரின் மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்