ஒரே கையெழுத்து.. கோடியில் புரண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்

x

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்தி ரூபாய்1.61 கோடி கையாடல் செய்த கணினி இயக்குபவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எஸ்வி மங்கலத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜா என்பவர் தற்காலிக கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தார். இவர், ஊராட்சிகளுக்கான நிதிக்குழு மானிய நிதியை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோரது மின்னணு பரிவர்த்தனை அட்டை மூலம் ரூ.1 கோடியே 61 லட்சத்து 23 ஆயிரத்து 223 தொகையை கையாடல் செய்திருப்பது அதிகாரிகளின் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்