சிங்கப்பூர் To தஞ்சாவூர்... திருமணத்திற்கு வந்த தொழிலதிபர்.. அரசு பள்ளிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

x

தஞ்சை மாவட்டம் சின்ன அம்மங்குடி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ஜெயபிரகாஷின் திருமணம் ஊரணிபுரத்தில் நடைபெற்றது. ஜெயபிரகாஷின் அழைப்பை ஏற்று, அவரது நிறுவனத்தின் உரிமையாளரான டொமினிக் ஆங் பாவ் லெங், தமிழ்நாட்டிற்கு வந்து திருமணத்தில் பங்கேற்றார். முன்னதாக ஊரின் எல்லையில் இருந்து ஆங் பாவ் லெங்கை, செண்டை மேளங்கள் முழங்க சாரட் வண்டியில் அழைத்து வந்து, மணமகன் வீட்டார் தடபுடலாக வரவேற்பு அளித்ததனர்.


Next Story

மேலும் செய்திகள்