சாலையில் தேங்கிய மழைநீரால் அதிர்ச்சி - பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த அந்த காட்சி

x

திருப்பூர் சாலையில் தேங்கிய மழைநீர் பிளாஸ்டிக் முறத்தை கொண்டு அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் போது சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் தேங்கிய மழைநீர், உடைந்த வாட்டர் பாட்டில் மற்றும் வீட்டில் குப்பை அள்ளும் முறத்தை பயன்படுத்தியும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்து பெற்ற திருப்பூரில் மழை நீரை அகற்ற தேவையான உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல், முறத்தை கொண்டு அகற்றிய சம்பவம் அவ்வழியே சென்ற பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்