நாட்டை விட்டு தப்பியோடிய பின் முதல்முறையாக மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா

x

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகு முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை ஷேக் ஹசீனாவின் மகன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய துக்க தினத்தை உரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அனுசரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள அவர், ஜூலை மாதம் நடந்த கொலைகள் மற்றும் நாசகார செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் தனது தந்தை உட்பட தியாகிகள் பலரும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்