கங்குவாவா..? தேவாராவா..? இயக்குநர் சங்கர் X தளத்தில் ஆவேசம்.!! | Shankar

x

சு. வெங்கடேசனின் நவயுக நாயகன் வேள்பாரி நாவலின் உள்ளடங்களை சிலர் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக இயக்குநர் சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, தமது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பதிப்புரிமை பெற்ற சு. வெங்கடேசனின் நவ யுக நாயகன் வேல் பாரி நாவலின் உள்ளடங்கள், பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைக் கண்டு கலங்கியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான திரைப்பட ட்ரெய்லரில் நாவலின் முக்கியமான காட்சியைப் பார்த்ததில் மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படைப்பாளிகளின் உரிமைகளை மதித்து, திரைப்படங்கள், வலைத் தொடர்கள் மற்றும் எந்த ஊடகத்திலும் நாவலின் காட்சிகளைப் பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மீறினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மதுரை எம்பி. சு. வெங்கடேசனின் நவயுக நாயகன் வேள்பாரி நாவலின் உரிமையை இயக்குநர் ஷங்கர் வாங்கி வைத்திருப்பதாகவும், அதனை அவர் திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில், நாவல் குறித்து இயக்குநர் சங்கர் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்