ஆதங்கப்பட்டு கேள்வி கேட்டவர் மீது செல்வப்பெருந்தகை கண்முன்னே தாக்குதல்.. பரபரப்பு காட்சிகள்

x

ஆனைமலையாறு- நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் வாசித்து கொண்டிருந்த போது சுரேஷ் என்பவர் ஆனைமலையாறு நல்லாறு அணை திட்டத்திற்காக உண்மையிலேயே போராட்டம் நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பி மேடையில் ஏற முயன்றார். இதையடுத்து அவரை சிலர் கூட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளி சென்று தாக்கினர். அங்கிருந்த போலீசார் சுரேஷை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்