பைக்கில் சென்றவரை பின் தொடர்ந்து.. லாரி ஏற்றி கொன்ற கொடூரன் - சேலத்தில் அதிர்ச்சி

x

பைக்கில் சென்றவரை பின் தொடர்ந்து.. லாரி ஏற்றி கொன்ற கொடூரன் - சேலத்தில் அதிர்ச்சி


சேலம் மாவட்டம் எலத்தூரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது தம்பி மணிகண்டன் ஆகிய இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளாக நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று முருகனும் மணிகண்டனும் இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் பின்னால் டெம்போ லாரியை ஒட்டி வந்த மாரிமுத்து இருவர் மீதும் மோதி இருக்கிறார். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மாரிமுத்து மற்றும் அவரது மகன் செல்வத்தின் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தருமபுரியில் தலைமறைவாக இருந்த செல்வம் மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்