"களத்தில் முதல்வர் ஸ்டாலின்.. ஈபிஎஸ் எங்கே?" - அமைச்சர் சேகர்பாபு

x

மழை ஆரம்பித்து 3 நாள்கள் ஆகியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்... சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு பால் ரஸ்க் உள்ளிட்ட மழை நிவாரண பொருட்களை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார். பின்னர் பாரிமுனையில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் எப்படி மக்களை காப்பதற்கு போராடுவார்களோ அப்படி முதலமைச்சர் களத்தில் மக்களை காக்க போராடி வருகிறார் எனத் தெரிவித்ததுடன், ஈபிஎஸ் மீது விமர்சனத்தை முன்வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்