டெல்லியில் ரகசிய ஆபரேஷன்.. போலீஸுக்கு ஷாக்

x

டெல்லியில் ரகசிய ஆபரேஷன்.. போலீஸுக்கு ஷாக்

#delhi #tnpolice #thanthitv

டெல்லி காவல்துறையினர் மேற்கொண்ட 2 மாத கால ரகசிய ஆபரேஷனில் தெற்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 560 கிலோ கோகோயின் போதைப் பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக துஷார் கோயல் உட்பட நான்கு பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்

சுதான்ஷு திரிவேதி, போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள துஷார் கோயல் இளைஞர் காங்கிரஸின் ஆர்.டி.ஐ. பிரிவின் தலைவர் என குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருள் விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் காங்கிரசுக்கு என்ன தொடர்பு உள்ளது என்பதை அறிய நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்