மாணவிகளிடம் ஆபாசமாக பேசி அம்பலப்பட்ட தமிழ் அய்யாவுக்கு நேர்ந்த கதி

x

காங்கேயம் அடுத்துள்ள முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் இவர் தொடர்ந்து ஆபாசமாக பேசி வருவதாக தலைமையாசிரியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஆசிரியைகளை கொண்டு குழு அமைத்து மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் பள்ளிக்கு விரைந்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். இறுதியில், மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ரவிச்சந்திரன் ஈடுபட்டது அமபலமான நிலையில், அவரை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்