காலையிலேயே திணற திணற நிற்கும் வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னையின் மிக முக்கிய சாலை

x

காலாண்டு விடுமுறை முடிந்து, பொதுமக்கள் சென்னை திரும்பி வருவதால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்