பள்ளி கல்வித்துறை செயலாளர் சொன்ன முக்கிய சேதி | Thanthitv

x

மத்திய கல்வி அமைச்சகம், நாடு முழுவதும் சுற்றறிக்கையை ஒன்றை அனுப்பி இருக்கிறது . அதில் வரும் 7-ம் தேதி முதல்,11ஆம் தேதி வரை, பள்ளி மாணவர்களிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பிலும் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. இதற்கு திமுக மற்றும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் இந்த போட்டிகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனிடையே மத்திய அரசின் இந்த பரிந்துரையை தமிழகம் ஏற்கவில்லை என்று, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு அத்தகைய போட்டிகள் எதுவும் நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்