உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.. சவுக்கு சங்கர் தாய்க்கு ஏமாற்றம்

x

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுவை விசாரித்து முடிக்க 20 நிமிடங்கள்தான் ஆகும் என சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டார்.

ஆனால், நேரமின்மை காரணமாக விசாரணையை செப்டம்பர் 20-ஆம் தேதி தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சவுக்கு சங்கர் தாயாரின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்