"எல்லா வழக்குகளுக்கும் காரணம் அவர் தான்" - திடீரென கத்திய சவுக்கு சங்கர்

x

புதுப்புது வழக்குகளில் தாம் கைது செய்யப்படுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சிவகங்கை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி அஃப்ரின் பேகம் ஜாமினில் விடுவித்தார். பின்னர் வெளியே வந்த சவுக்கு சங்கர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் கார் பந்தயம் முடிவு பெறும் வரை, தாம் வெளியில் வர முடியாத அளவுக்கு தினசரி தன் மீது புதிய வழக்கு பதியப்பட்டு வருவதாக பரபரப்பாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்