சவுதி அரேபியாவில் கணவர் கைது.. கலெக்டர் ஆஃபீஸில் கதறும் மனைவி.. "சாப்பாட்டுக்கே வழியில்ல"

x

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சவுதி அரேபியாவில் மீன் பிடி கூலியாக வேலைக்கு சென்று, சந்தேக வழக்கில் கைதாகியுள்ள தனது கணவரை மீட்டு தரும்படி அவரது மனைவி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். சவுதி அரேபியாவில் கூலி வேலைக்கு சென்ற முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த சமயகாந்த்-ஐ சந்தேக அடிப்படையில் சவுதி அரேபியா போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்நிலையில் முள்ளிமுனையில் அவரது குடும்பத்தினர், சாப்பிடக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தனது கணவரை மீட்டு தாயகத்திற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்