சதுரகிரியில் ஷாக் செய்தி - சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்

x

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை ஒட்டி 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய நினைத்த நிலையில், 12 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்ததால் தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் தொடங்கி, மலைப்பாதை முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டது. தானிப்பாறை வனத்துறை கேட் முன் நுழைவுச்சீட்டு வாங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், 12 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால், தவிப்பிற்கு ஆளாகினர். வனத்துறை கேட்டின் முன்பே சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்