"தி.மு.க. எம்.பி.க்கள்.." - தென்காசியில் சசிகலா பரபரப்பு பேச்சு

x

நாடாளுமன்றத்திற்கு செல்லும் தி.மு.க. எம்.பி.க்கள் வீணாக சண்டையிடாமல் மக்களுக்கான திட்டங்களை பெற்று தர வேண்டும் சசிகலா தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், செங்கோட்டை, பண்பொழி, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்திக்க உள்ளார். முன்னதாக செங்கோட்டையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மக்களிடம் பேசிய அவர், தி.மு.க.வை பொறுத்தவரை வெறும் அறிவிப்பு மட்டும் தான், செயலில் ஒன்றும் இல்லை என தெரிவித்தார். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கு அதற்கு காரணம் அனைத்து பதவிகளும் தி.மு.க. வசம் இருப்பதால்தான் என்றும் அவர் விமர்சித்தார்.

-


Next Story

மேலும் செய்திகள்