தங்க காகம் வாகனத்தில் எழுந்தருளிய சனிபகவான்..மனமுருகி வேண்டிய பக்தர்கள் | Sani Bhagavan | Tamilnadu

x

திருநள்ளாறு, தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின், தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இன்று மாலை 5.20க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான், பிரவேசிக்க உள்ளார். இந்நிலையில், நேற்று தங்க காகம் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அவர் காட்சியளித்தார். அவருக்கு ஏராளமான பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், சனீஸ்வர பகவான் கோயில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சனிப்பெயர்ச்சி நாளான இன்றிலிருந்து, நாளை காலை வரை இந்த நிலையில் காட்சி அளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்