சமுத்திரகனிக்கு சொந்தமான நிலத்தில் திருட்டு.. தட்டி தூக்கிய போலீஸ் | Samuthirakani

x

இயக்குனர் சமுத்திரகனிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து பவர் டில்லரை திருடிய பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் அணை அருகே உள்ள சமுத்திரக்கனிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த பவர் டில்லர் இயந்திரம் திருடு போயுள்ளது. விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் விஜியா என்பவர்களின் உதவியோடு, மங்கலம் பகுதியை சேர்ந்த இருவர் இயந்திரத்தை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்